Saturday, November 4, 2017


துணைவேந்தருக்கு எதிரான வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக, தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கை வாபஸ் பெற்றதால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் (ஓய்வு) சீனிவாசன். பல்கலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக்கூறி போராடினார். 2014 மே 16 காலை 6:30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றபோது, 
சீனிவாசன் தாக்கப்பட்டார்.
அப்போதைய துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை தலைவர் செல்லத்துரை (தற்போது துணைவேந்தர்), பி.ஆர்.ஓ., அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் செல்வராஜ் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சீனிவாசன், 'எனக்கும், சாட்சிகளுக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க 
வேண்டும். 
நடுநிலையான விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதில் தற்போது கோரும் நிவாரணம் தொடர்பாக கூடுதல் மனு செய்யலாம். புதிதாக தனி மனு தாக்கல் செய்து, நிவாரணம் கோருவது ஏற்புடையதல்ல. இம்மனு நிலைநிற்கத்தக்கதல்ல,'' என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றதால், நீதிபதி தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...