Monday, November 6, 2017


நீதிமன்றத்தை விமர்சித்ததாக சம்மன்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கம்

சிவகங்கை:நீதிமன்றத்தை விமர்சித்ததாக போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து, சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்கோ-ஜியோ சார்பில் செப்., 7 முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து போராட்டத்தை கைவிட்டு, செப்., 15 ல் மீண்டும் பணிக்கு திரும்பினர். அதே சமயத்தில் நீதிபதிகளை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகளை விமர்ச்சித்தோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, தமிழரசன், முத்துப்பாண்டியன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது. அதேபோல் எங்களது மற்ற கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்பும் போராட்டம் செய்ததால் எங்கள் மீது அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இதில் எங்களது நிர்வாகிகள் ஆஜராகி, போராட்டத்திற்கான நியாயங்களை தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஊதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் போராட்டத்தின் போது எங்களது அமைப்பினர் நீதிமன்றம் குறித்து அவதுாறாக பேசவில்லை. அதேபோல் சமூக வலைதளங்களிலும் எந்தவித அவதுாறும் பரவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபட மாட்டோம், என விளக்கமளித்தனர்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...