Saturday, November 25, 2017

இதுதான் ரஜினி ஸ்டைல்! ஆறிலிருந்து அறுபத்தி ஏழு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

By உமா பார்வதி  |   Published on : 23rd November 2017 03:50 PM

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு தமிழ்நாட்டில் ஒரு வசீகர சக்தி இருக்கிறது என்று அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதராக தம்வாழ்வைத் தொடங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உயர்ந்தது சமகால சரித்திரம். நடிப்பில் சொந்த வாழ்க்கையில் ஆன்மிகத்தில் என ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றிக் கொடி கட்டி பவனி வரும் ரஜினி அரசியலில் நுழைவதில் மட்டும் மதில் மேல் பூனையாக பல ஆண்டுகாலம் தடுமாறி வருவது ஏன்? இதற்கும் அரசியல் தான் காரணம் என்றாலும் ரஜினியின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?

தன்னிகரற்ற நடிகராக ரஜினி

சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாவது என்பதும் மாயாஜாலத்தில் நடப்பது இல்லை. அதற்குத் தேவை கடுமையான உழைப்பும், தீவிரமாக நம்பும் ஒன்றில் முற்றிலுமாக தன்னை இழப்பதினாலும்தான் ஒருவர் அத்தகைய பெருமையை அடைய முடியும். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டாராம் ரஜினி. காலை வந்தவர், மாலை வரை படப்பிடிப்பு முடியும் வரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே சிறிது நேரம் புத்தகம் படிப்பார் அல்லது ஓய்வெடுப்பார் ரஜினி.

‘எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது’ எனும் விவேகானந்தரின் பொன்மொழியை தனது வீட்டு வரவேற்பறையில் பதித்துள்ளார். ரஜினிகாந்தால் தான் விரும்பியதை எளிதில் சாதிக்க முடிந்தது. அதற்கான வழிமுறைகளை தானே கண்டடைந்தவர் அவர். தேர்ந்த நடிப்புத் திறனுடன், அதைப் பன்மடங்கு மெருகேற்றக் கூடிய ஜிமிக்ஸ் தெரிந்தவர். ‘எந்திரன்’ படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ஒரே சமயத்தில் ஒரே படத்தில் ரஜினியால் இது நடிப்பு என்ற தெரியும்படியான நடிப்பையும், அதே சமயம் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பாவனைகளையும் வெளிப்படுத்தி நடிக்க முடியும். ரஜினி ரசிகர்கள் கூட பிரித்துணர முடியாத நுணுக்கம் அது.

எந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உயர்த்தி காட்ட முடியுமோ அதன் உச்சத்துக்கு சென்று நியாயம் செய்வார் ரஜினி. போலவே உணர்ச்சிப் பிழம்பான காட்சிகளில் இயல்பான நடிப்பால் உருக்கமாக நடித்து கண்கலங்கச் செய்துவிடும் திறமையானவர் ரஜினி. உதாரணத்துக்கு தளபதி படத்தின் பல காட்சிகளை சொல்லலாம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே, முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே’ பாடல் காட்சியில் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி.

நெகிழ்ச்சி, உருக்கம், கண்ணீர், மகன் என்று சொல்ல முடியாத இயலாமை, தாயின் கூந்ததிலிருந்து உதிரும் ஒற்றை மல்லிப் பூவை, கையில் ஏந்து பார்த்தல் என ரஜினி அப்பாடலைக் காண்பவரின் இதயத்தை தனது நடிப்பால் வென்றிருப்பார். இதுதான் ரஜினியின் தனித்தன்மை. அவரது உடல்மொழி, வேகம், நடை, மேனரிஸம் மற்றும் ஸ்டைல் அவரின் வெற்றியின் முக்கிய காரணிகள்.

தனது கதாபாத்திரத்தின் மனநிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக நடிப்பில் பிரதிபலிக்கும் ஒருசில கதாநாயகர்களுள் ரஜினியும் ஒருவர் எனலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், கொரியா, சீனா என உலக நாடுகள் பலவற்றில் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர். ஃபெண்டாஸ்டிக் ஃபெஸ்ட் என்று அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விழாவில் பாட்சா இந்த ஆண்டு திரையிடப்பட்டு அமெரிக்க ரசிகர்களின் பலத்த பாராட்டுக்களை பெற்றது. அவரது ஒரு படத்தின் குறைந்தபட்ச வர்த்தகம் ரூ 200 கோடி.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...