Thursday, May 24, 2018

பிளஸ் 2 படித்த 'டாக்டர்' கைது

Added : மே 24, 2018 02:10

வாணியம்பாடி: பிளஸ் 2 மட்டுமே படித்து, சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, சின்ன வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், கிருபாகரன், 42. பிளஸ் 2 படித்துள்ள இவர், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., என போர்டு வைத்து, வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார்.புகாரையடுத்து, வேலுார் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில், நேற்று, கிளினிக்கில் சோதனை செய்ததில், அவர் போலி டாக்டர் என தெரிந்தது.

வாணியம்பாடி தாலுகா போலீசார், அவரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEW TODAY 01.08.2026