Friday, January 2, 2015

'ஆன் - லைன் விசா'அதிகரிக்கிறது விண்ணப்பம்

புதுடில்லி:இந்திய நகரங்களுக்கு, சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்காக, 'விசா ஆன் அரைவல்' முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், இணையம் மூலம், அந்த விசா கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 22 ஆயிரம் விசாக்கள், இணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி முதல் நவம்பர் வரை, 25 ஆயிரம் ஆன் அரைவல் விசாக்கள் வழங்கப்பட்டன. நவ., 27 முதல், ஆன் - லைன் மூலம், விசா ஆன் அரைவலுக்கு விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அனுமதித்தது.அந்த தேதியிலிருந்து, டிச., 31 வரை, 22 ஆயிரம் விசாக்கள், ஆன் - லைன் முறையில் வழங்கப்பட்டு உள்ளன.பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சை, வர்த்தகம் போன்ற பல காரணங்களுக்காக, அதிகபட்சம் 30 நாட்கள், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல, ஆன் - லைன் விசா கோரிவிண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...