Sunday, May 6, 2018

நீட் தேர்வு..! கடுமையான சோதனைகளுடன் மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதி 

கார்த்திக்.சி

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்றவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த‍த் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த‍த் தேர்வுக்காக நாடு முழுவதும் 2,255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் ஏ-பிரிவு, பி-பிரிவு என்று வழங்கப்பட்டுள்ளது.



ஏ-பிரிவு மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றை கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றுவருகிறது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...