Monday, December 2, 2019

விதிகளை மீறி மாணவர் சேர்க்கை பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

Added : டிச 01, 2019 21:44

சென்னை: தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்று உள்ள நிறுவனங்கள், விதிகளை மீறி, மாணவர்களை சேர்த்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது, கல்வி கட்டணம் நிர்ணயிப்பது, பேராசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில், யு.ஜி.சி., விதிகளின்படி மட்டுமே, கல்லுாரிகள் செயல்பட வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், தனியார் சுயநிதி பல்கலைகளும், தொலைநிலை கல்வியை நடத்தலாம் என, முதன்முறையாக, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்று உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் பட்டியலையும், இணைய தளத்தில், யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. யு.ஜி.சி., அளித்துள்ள அவகாசத்துக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள வேண்டும்; நன்கொடைகள் வசூலிக்க கூடாது. ரெகுலர் படிப்பு மற்றும் தொலைநிலை கல்வி என, இரண்டிலும், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, பயிற்சி அளிக்க வேண்டும் என, றிவுறுத்தப்பட்டுள்ளது.விதிகளை மீறுவதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...