Wednesday, March 22, 2017

முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகையை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி



முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட இதரச் சலுகைகளை முறைப்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகையை நிறுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், சலுகையை முறைப்படுத்த சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.



Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025