Saturday, March 18, 2017

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உரிமையாளரான பஞ்சாப் விவசாயி!

பஞ்சாப் விவசாயி சம்பூரன் சிங் என்பவரின் நிலத்தை, வடக்கு ரயில்வே கையகப்படுத்தியது. இது தொடர்பாக சம்பூரன் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு ரூ.1.47 கோடி தர நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு ரயில்வே ரூ.47 லட்சம் மட்டுமே வழங்கியது. முழுப்பணம் செலுத்தப்படவில்லை.

இதையடுத்து, தனக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடி வந்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டில் அவருக்கு ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ரயில் டெல்லி-அம்ரிஸ்டர் இடையே இயங்கி வருகிறது.

இதற்கான நீதிமன்ற ஆர்டருடன் லூதியானா ரயில் நிலையத்துக்கு சம்பூரன் சென்றார்.

ஆனால், அதில் பயணிகள் இருந்ததால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். ரயில் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்ற பிறகு, ரயிலை எடுத்துக் கொள்கிறேன் என சம்பூரன் கூறினார்.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு ரயில்வே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, சம்பூரனுக்கு வழங்கப்பட்ட ரயில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், வருகின்ற சனிக்கிழமைக்குள் சம்பூரனுக்கு வழங்க வேண்டிய பணம் வழங்கப்பட வேண்டும், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுபோன்ற தீர்ப்பு வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்தாண்டு கூட கர்நாடக நீதிமன்றமும் இதுபோன்ற வழக்குக்கு, 62 வயது விவசாயி ஒருவருக்கு ரயில் வழங்க உத்தரவிட்டிருந்தது.
Dailyhunt

No comments:

Post a Comment

Jacto-geo to go on strike from Jan 6

Jacto-geo to go on strike from Jan 6 TIMES NEWS NETWORK 23.12.2025 Chennai : The talks held by the ministerial panel with representatives of...