Sunday, March 12, 2017


பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினார் தமிழிசை!



உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றதைக் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.

அவருடன் பாஜக தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் இனிப்பு வழங்கினார்.



அதேபோல் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் முன்பு, பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பாஜகவினர் வெடிவெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கரூர் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து காெண்டாடினர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...