Monday, March 13, 2017


ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு
March 13, 2017





கடலூர் மாவட்டம் கிள்ளையில் தீர்த்தவாரியில் பங்கேற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தது மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசுவாமி கோவில் மாசிமகத் திருவிழாவையொட்டி சுவாமி தீர்த்தவாரிக்காகத் தங்கக் கருட சேவையிலும் பின்பு யானை வாகனத்திலும் ஊர்வலம் வந்தார்.

கிள்ளையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தெரு வழியாக வந்தபோது, கிள்ளை தைக்கல் இஸ்லாமியர்கள் சுவாமிக்குப் பட்டுத் துண்டு அளித்து தர்காவில் தொழுகை செய்து வரவேற்றனர். பின்பு கிள்ளை கடற்கரையில் பொதுமக்கள் சார்பிலும் பூவராகசுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்து கோவில் திருவிழாவில் சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...