Tuesday, May 22, 2018

பெண் டாக்டரை கட்டிப்போட்டு கொள்ளை : பரமக்குடியில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

Added : மே 22, 2018 02:33



பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓய்வு பெற்ற பெண் டாக்டரை கட்டிப்போட்டு தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.பரமக்குடி சேதுபதி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி டாக்டர் கிருஷ்ணவேணி. சென்னையில் உள்ள மகனை பார்க்க டாக்டர் பாலசுப்பிரமணியன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த முகமூடி அணிந்த நான்கு நபர்கள் கிருஷ்ணவேணியை மிரட்டி கட்டிப்போட்டனர். பின், நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி கூறியதாவது:கொன்று விடுவதாக முகமூடி கொள்ளையர் மிரட்டினர். எனது வைர தோடு உட்பட அனைத்து நகைகளையும் கழற்றி கொடுத்தேன். கைகளை கட்டி போட்டு, 37 பவுன் தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள், 2 அலைபேசிகளை கொள்ளையடித்து தப்பினர், என்றார்.வெளியே வந்த அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். மோப்பநாய் அருகிலுள்ள வைகை ஆறு வரை ஓடியது.கொள்ளையர்கள் தாங்கள் வந்த பைக்கை அங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அது திருட்டு வாகனமா எனவும் விசாரணை நடக்கிறது.



Advertisement

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...