Monday, March 13, 2017

நாளை முதல் இரு நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

12.03.2017

நாளை முதல், இரண்டு நாட்களுக்கு, இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு வாரமாக, கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மழையால், பல இடங்களில் நீர் நிலைகளில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம், மேட்டுப்பட்டியில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இது குறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், 'நாளை முதல், இரண்டு நாட்களுக்கு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, கொடைக்கானல், மதுரை, சேலம், திருச்சி, வேலுார், ஈரோடு, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யலாம்' என்றனர்.
சென்னை, வேலுாரில் வெப்பம் அதிகரிப்பு: பல மாவட்டங்களில் கோடை மழையால் வெப்ப தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், சென்னை, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வெப்பம் அதிகரித்துள்ளது. வேலுாரில், நேற்று அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் பதிவானது; இன்று, 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...