Saturday, March 18, 2017

சேகர்ரெட்டி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

மார்ச் 18, 04:00 AM

சென்னை,

சென்னை தியாகராய நகரை சேர்ந்த சேகர்ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள், பல கோடி மதிப்பில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர்ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன், கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மால் லோதா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே, திண்டுக்கல் ரத்தினம், ராமசந்திரன் ஆகியோர் ஜாமீனில் வெளியில் சென்றுவிட்டனர். இந்த நிலையில், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி வெங்கடசாமி, விசாரித்து சேகர்ரெட்டி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், 3 பேரும் தலா ரூ.5 லட்சத்துக்கு சொந்த உத்தரவாதமும், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதமும் வழங்கவேண்டும். தங்களது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...