Thursday, March 23, 2017

6 மாத சம்பளம் கிடைக்காது! :  டாக்டர்களுக்கு எச்சரிக்கை
மும்பை: 'மஹாராஷ்டிராவில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், பணிக்கு திரும்பா விட்டால், ஆறு மாதச் சம்பளத்தை இழக்க நேரிடும்' என, அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும்3,500 டாக்டர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், மொத்தமாக விடுப்பு எடுத்து,வேலைநிறுத்த போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங் களில் பாதுகாப்பு கோரி, இந்த போராட்டத்தை, டாக்டர்கள் நடத்தி வருகின்றனர்.





இதனால், அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.

இந் நிலையில், மாநில மருத்துவ கல்வி அமைச்சர், கிரிஷ் மஹாஜன், மும்பையில், கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால், ஆறு மாத சம்பளத்தை இழக்க நேரிடும். பணி இடங்களில் டாக்டர் களின் பாதுகாப்புக்காக, 1,100 பாதுகாவலர் களை அளிக்க திட்டமிட்டுள் ளோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கி டையே, மும்பை மாநகராட்சி அதிகாரி கள், மூன்று நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், மும்பையைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025