Wednesday, March 1, 2017

சென்னையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

சென்னை : கடந்த ஆண்டு பருவமழை பொய்ததால் தமிழக அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு 15 சதவீதத்திற்கும் கீழாக உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கோடை காலம் துவங்க உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பதை தடுக்க 520 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வாங்குகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024