Tuesday, March 7, 2017

கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?


புதுடில்லி: ‛‛கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டில் சுகமாக வாழும் போது, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவர் 5 சேலைகளை திருடியாதாக அம்மாநில போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்தனர். ஆனால் இது வரை அவர் எந்த வித விசாரணையும் இன்றி சிறையிலேயே இருந்து வருகிறார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

சேலை திருடியவருக்கு 1 வருடம் சிறையா?

இதை எதிர்த்து அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கேகர் கூறுகையில் ‛‛ கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, 5 சேலை திருடியவர் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார்'' என தெலுங்கானா போலீசிற்கு கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி கேகர் கோடி கணக்கான பணத்தை கடனாக பெற்று விட்டு வெளிநாட்டில் வாழும் விஜய் மல்லையாவின் பெயரை சொல்லாமல் அவர் சுதந்திரமாக இருப்பதை சுட்டிக்காட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...