Tuesday, March 14, 2017

ரூ.40க்கு பதில் ரூ. 4 லட்சம் வசூலித்த டோல்கேட் ஊழியர்கள்

மங்களூரு: டோல்கேட்டில் டாக்டர் ஒருவரிடம் ரூ.40க்கு பதில் ரூ.4 லட்சம் வசூலித்து டோல்கேட் ஊழியர்கள் அதிர்ச்சியளித்தனர். டாக்டர் புகார் அளிக்கவே பாக்கி தொகையை அவர்கள் திருப்பி கொடுத்தனர்.

மைசூரை சேர்ந்த ராவ் என்ற டாக்டர், கொச்சி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், மும்பை காரில் நோக்கி சென்றார். நேற்று இரவு 10.30 மணியளவில் உடுப்பி அருகே சென்ற போது, டோல்கேட்டில் சுங்க கட்டணத்தை செலுத்துவதற்காக தன் கிரெடிட் கார்டை கொடுத்தார். டோல்கேட் ஊழியர் கார்டை மிஷினில், 'ஸ்வைப்' செய்த பின்னர் கார்டையும், ரசீதையும் கொடுத்தார். தொடர்ந்து அவரது மொபைலுக்கு ரூ.4 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இது குறித்து ஊழியரிடம் ராவ் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக கூறினர். ராவ் எவ்வளவோ கூறியும், வாக்குவாதம் செய்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து சென்ற டாக்டர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷ னில் புகார் அளித்து அங்கிருந்து போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து கொண்டு வந்தார்.

 போலீஸ் விசாரணையில், ஊழியர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இந்த பணத்திற்கு செக் தருவதாக கூறினர். ஆனால், டாக்டர் ரொக்கமாக தான் வழங்க வேண்டும் என உறுதியாக கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தங்களது உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, ரூ.3,99,960 ஐ டாக்டரிடம் திரும்ப கொடுத்தனர்.இந்த டோல்கேட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வசூலாவதாக போலீசார் கூறினர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...