Monday, June 25, 2018

மாவட்ட செய்திகள்

சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள்




  ஸ்ரீபெரும்புதூர்-சிங்கபெருமாள் கோவில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜூன் 25, 2018, 04:00 AM
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-சிங்கபெருமாள் கோவில் 6 வழி சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் ஒரகடம், மாத்தூர், வல்லக்கோட்டை போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகின்றது.

மேலும் வல்லக்கோட்டை அருகே சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவிலே அதிகமாக மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்துக்கொள்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் செல்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...