Monday, March 13, 2017

மின் தடை புகார் மையம் துரிதமாக செயல்படுமா?

கோடை துவங்கியதால், மின் தடை புகார்கள் மீது, துரித நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை, காஞ்சி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், சேலம், வேலுார், கரூர், திருப்பூரில், மின் வாரியம் சார்பில், கணினிமய மின் தடை நீக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன

. இந்நகரங்களில் வசிக்கும் நுகர்வோர், மின் தடை ஏற்பட்டால், '1912' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார், மின் தடை நீக்க பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மழை மற்றும் கோடை காலங்களில், மின் சாதன பழுது காரணமாக, அடிக்கடி மின் தடை ஏற்படும். சமீபகாலமாக, கணினிமய மையத்தில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில், வெயில் கடுமையாக உள்ளதால், மின் தடை புகார் மீது, கணினி மையம் துரித கதியில் நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம், நுகர்வோரிடம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறுகையில், 'கணினி மையத்துக்கு புகார் தெரிவிக்க போன் செய்தால், எப்போதும், 'பிசி'யாக இருப்பதாக தகவல் வருகிறது; பொறியாளர்களும் போனை எடுப்பதில்லை' என்றனர்.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: கணினிமய புகார் மையத்தில், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், குறைந்த சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்; ஓய்வும் கொடுப்பதில்லை. மேலும், அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்காமல், சில மின் ஊழியர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, கோடை காலத்தை முன்னிட்டு, கணினிமய புகார் மையங்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...