Monday, March 13, 2017

பா.ஜ., வெற்றியால் தமிழக அரசு கலக்கம் :
'நீட்' மசோதாவுக்கு கூடுதல் அழுத்தம் தருமா?



உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு, தமிழக அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.




உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஜூனில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், மாநில கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ஓட்டுகள் தேவை. எனவே, மத்திய அரசை, தங்கள் கோரிக்கைகளுக்கு பணிய வைக்கலாம்' என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, தற்போதைய தமிழக அரசு கணக்கு போட்டிருந்தது. ஆனால், பா.ஜ.,வின் சமீபத்திய வெற்றி, நிலைமையை தலைகீழாக மாற்றி விட்டது.

உத்தரவு :

அதாவது, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய நுழைவு தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு தமிழக மாணவர்களை பாதிக்கும் என்பதால், நீட் தேர்வி லிருந்து மாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக் கும் வகையில், சட்டசபையில் மசோதா நிறை வேற்றப்பட்டு, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதா தொடர்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட பிறகே, அதற்கு ஜனாதிபதி ஒப்பு தல் அளிப்பார். தற்போதைய அரசியல் சூழல், பா.ஜ., வுக்கு மிக சாதகமாக மாறியுள்ளதால், முன்னர் போல, அ.தி.மு.க., அரசின் கோரிக்கை களுக்கு, பா.ஜ., பெரிய அளவில் ஆதரவு தெரிவிக் குமா, உடனடியாக செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சந்தேகம் :

மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உச்சநீதிமன்றத்தை அணுகினால், தமிழகத்துக்கு சாதகமான உத்தரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, நீட் தேர்வு விலக்கு

விஷயத்தில், மத்திய அரசின் ஒப்புதலை பெற, தமிழக அரசு, வழக்கத்தை விட, கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசுடன் மோதல் போக்கை வளர்க்கா மல், ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்படு வதும் அவசியம். அப்போது தான், மசோதாவுக் கான ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவில் பெற முடியும். இந்தப் பிரச்னை களால், தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதும், அறிவியல் பிரிவு மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவும் முடிந்து விட்டதால், மருத்துவ கனவில், பிளஸ் 2வில் சேர்ந்த மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல், கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...