Wednesday, July 5, 2017

மயிலின் 1 மணி நேர 'ஆட்டம்' : விருத்தாசலம் அருகே அதிசயம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:09



விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, தினசரி, காலையில் ஒரு மணி நேரம், மயில் தோகை விரித்து ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி பகுதியில், அதிக மயில்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அங்குள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்து தானியங்களை உண்கின்றன. இந்த கூட்டத்தில் உள்ள, ஒரு மயில், தினசரி, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, குடியிருப்புகளுக்கு நடுவே, தோகை விரித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுஉள்ளது.மழை மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடும்.

ஆனால், விருத்தாசலம் அருகே, அதிசய மயில், தினசரி ஒரு மணி நேரம் ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். மக்கள் கும்பலாக திரண்டு நின்று பார்த்தாலும், அந்த மயில் பறந்து செல்லாமல், வழக்கமான ஆட்டத்தை முடித்து விட்டே செல்கிறது.

No comments:

Post a Comment

TN may lose 650 MBBS seats, admissions to get tougher, fees set to soar. State health officials say deemed university status granted despite no NOCs

TN may lose 650 MBBS seats, admissions to get tougher, fees set to soar   Pushpa.Narayan@timesofindia.com 07.07.2026 Chennai : 07.07.2026 Ge...