Wednesday, July 26, 2017

கர்நாடகாவில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

Published : 26 Jul 2017 13:32 IST



கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் நல்ல மழைப் பொழிவைச் சந்தித்த யாத்கிர் மாவட்டம், ஜூலையில் 31.02 மி.மீ. மழையையே சந்தித்தது. ஜூன் மாத மழை காரணமாக குறுகிய காலப் பயிர் வகைகளாக பருப்பு வகைகளை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். ஆனால் ஜூலையின் குறைவான மழையின் காரணமாக விளைச்சல் கடுமையாக சரிய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

அத்தகைய சம்பவங்களில் ஒன்றாக தவளைக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை அன்று நாய்க்கல் கிராமத்தில் நடைபெற்றது.

திருமணத்தின்போது ஊர் மக்கள் அனைவரும் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர். இதுகுறித்துப் பேசிய பெண், ''எங்களால் மழை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறோன்றும் செய்ய முடியாது'' என்றார்.

அனைத்து சடங்குகளும் முடிந்தபின்னர், புதிதாகத் திருமணம் ஆன தவளை ஜோடிகள் அதன் போக்கில் விடப்பட்டன.

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...