Sunday, July 30, 2017

அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
21:39

கோவை, :கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து, ஆக., 5ல் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாகஅறிவித்துள்ளனர்.'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; எட்டாவது ஊதிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவின் ஆய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் அமைப்பாளர்கள் செந்தில்    குமார் உள்ளிட்டோர்   றியதாவது:கோரிக்கையை வலியுறுத்தி, ஆக., 5ல் கோட்டையை நோக்கி பேரணி, 22ல் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 26ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்படும்.இதில், 27 ஆசிரியர் சங்கங்கள், 17 அரசு ஊழியர் சங்கங்கள் உட்பட, 64 சங்கங்கள் கைகோர்த்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தினரை, அழைத்து பேசி, கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...