Sunday, July 30, 2017

அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 03:19



சென்னை: பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும், கும்பகோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இந்த ரயில், கும்பகோணத்திலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, கும்பகோணத்தில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும்போது, காலை, 8:03 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். அங்கிருந்து, 8:07 மணிக்கு புறப்படும். பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...