Wednesday, November 1, 2017


மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் கைது

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை, கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விட்ட, 16 மத்திய அரசு ஊழியர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை, கே.கே. நகரில், மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்த வாடகையில், வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. 
அங்கு ஒதுக்கீடு பெற்ற பலர், அவற்றை, மத்திய அரசில் பணிபுரியாத பலருக்கு, அதிக வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், சில மாதங்களுக்கு முன், அங்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், குற்றச்சாட்டு உறுதி என, தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 16 ஊழியர்களையும் கைது செய்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

- நமது நிருபர் - 

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...