Friday, November 24, 2017

விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் மீன்களை அள்ளிய மக்கள்

Added : நவ 23, 2017 23:48



அராரியா: பீஹார் மாநிலம், அராரியா மாவட்டத்தில், மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவாமல், மீன்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம் காலை, அராரியா மாவட்டம், சிமராஹா பகுதியில், மீன்களை ஏற்றி வந்த வேன், சாலையில் திரும்பும்போது, திடீரென கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், வேன் டிரைவரும், உதவியாளரும், பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, அப்பகுதி மக்கள், காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளருக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றனர்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...