Saturday, November 18, 2017

 சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பு

 சபரிமலை: சபரிமலையில் நேற்று, தமிழக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து, கேரள மாநிலம், சபரிமலை நடை திறக்கப்பட்டு, மண்டல கால பூஜைகள் துவங்கின. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல், இரவு வரையிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. முன்னதாகவே மாலையிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், இருமுடி கட்டி வந்து, அய்யப்பனை தரிசனம் செய்தனர். தமிழக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. நேற்று, சபரிமலையில், பகலில் நல்ல வெயில் அடித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024