Thursday, November 2, 2017

Posted Date : 02:30 (02/11/2017)

உத்தரப் பிரதேச என்.டி.பி.சி-யில் பாய்லர் வெடித்து விபத்து... 20 பேர் பலி!
ர.பரத் ராஜ்

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் இருக்கும் என்.டி.பி.சி அனல் மின் நிலையத்தில், பாய்லர் வெடித்ததன் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாய்லர் வெடித்ததை அடுத்து, பலர் மின் நிலையத்தில் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று யூகிக்கப்படுவதால் பலி எண்ணிக்கை உயரம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தால் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.




இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, `ரேபரேலி என்.டி.பி.சி-யில் ஏற்பட்டிருக்கும் விபத்து மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கின்றது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் சீக்கிரமே குணமாகட்டும். இந்த சம்பவம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிட அதிகாரிகள் வேலை செய்து வருகின்றனர்' என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...