Tuesday, December 19, 2017

கார்களில் 'பம்பர்' பொருத்த அரசு தடை : விபத்துகளில் 'ஏர்பேக்' விரியாததால்

Added : டிச 19, 2017 00:51


நிலக்கோட்டை: கார்களில் பொருத்தும் 'பம்பர்'களால் விபத்தின் போது 'ஏர்பேக்' உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வேலை செய்யாமல் போவதால் 'பம்பர்' களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர், போக்குவரத்து துறை ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்: கார்களின் முன்புறம் 'பம்பர்' பொருத்துவது வழக்கமாக உள்ளது. இது மோட்டார் வாகன சட்டம் 1988, 52வது பிரிவின் படி தவறு. அவ்வாறு தேவையற்ற பாகங்கள் வாகனங்களில் இணைத்து இருந்தால் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 190,191ன்படி தண்டனை வழங்க வேண்டும். இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்திய சாலை
விபத்துகளில் உயர்ரக கார்களில் உள்ள 'ஏர்பேக்' சிஸ்டம் சரியாக வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்படுவது தெரியவந்தது. விபத்து நடந்த கார் கம்பெனிகளிடம் பாதுகாப்பு முறைகள் வேலை செய்யாதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு அக்கம்பெனிகள் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுபோல இருந்ததை, மத்திய அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கம்பெனிகள் கொடுத்த விளக்கப்படி, கார்களில் 'பம்பர்' பொருத்தி இருந்ததால் 'ஏர்பேக்' வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். விபத்தில் சிக்கும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால்தான் 'ஏர்பேக்' வேலை செய்து, உயிரிழப்பை தவிர்க்க முடியும். 'பம்பர்'களால் உராய்வு குறைந்து 'ஏர்பேக்' வேலை செய்யாமல் பலி அதிகரித்ததால், மத்திய அரசு 'பம்பர்'களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது'' என்றனர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...