Thursday, December 21, 2017

அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு கல்லூரிக்கு 'சீல்'

Added : டிச 21, 2017 04:30

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில், அரசு அனுமதி பெறாத மேலும் ஒரு
பாரா மெடிக்கல் கல்லுாரிக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, அருப்புக்கோட்டையில் 2 கல்லுாரிகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள வெற்றி வேலன் பாரா மெடிக்கல் கல்லுாரிக்கும் சீல்
வைக்கப்பட்டுள்ளது.சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன் கூறுகையில், ''அருப்புக்கோட்டையில் 3 கல்லுாரிகளுக்கு 'சீல்' வைத்துள்ளோம். அங்கு படித்த மாணவர்கள்
தங்கள் சான்றிதழ்களை, உரிய ஆதாரங்களை காண்பித்து விருதுநகரில் உள்ள மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

அரசு அனுமதியில்லாமல் மாவட்டத்தில் இயங்கும் ேஹாமியோபதி மற்றும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளில் தொடர் ஆய்வு செய்து வருகிறோம் ,'' என்றார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...