Tuesday, December 19, 2017

'ரூ.6,000 கிடைக்கல':அ.தி.மு.க. அலுவலகம் முற்றுகை

dinamalar
சென்னை: 'ஓட்டுக்கு பணம் கொடுத்த போது, நாங்கள் வீட்டில் இல்லாததால், எங்களுக்கு கிடைக்கவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க., பணிமனையில், நேற்று வாக்காளர்கள் குவிந்தனர்.



வீட்டுக்கு வீடு ரூ. 6000

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 21ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர்களை வளைக்க, கட்சியினர் போட்டி போட்டு, பணத்தை வாரி இறைக்கின்றனர். அ.தி.மு.க.,வினர், 16ம் தேதி, ஒரே நாளில் தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடாவை முடித்தனர். வாக்காளருக்கு, தலா, 6,000 ரூபாய் என, வீட்டுக்கு வீடு பட்டுவாடா செய்தனர்.

இந்நிலையில், 16ம் தேதி பணம் கிடைக்காத வாக்காளர்கள், 100க்கும் மேற்பட்டோர்,

காசிமேட்டில் உள்ள, அ.தி.மு.க., பணிமனையை, நேற்று முற்றுகையிட்டனர். 'பணம் கொடுத்த அன்று, வீட்டில் இல்லாததால், பணம்கிடைக்கவில்லை' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த நிர்வாகிகள், பட்டுவாடா பொறுப்பாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, அவர்களை சந்திக்கும்படி கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களும் கலைந்து சென்றனர்.

போலீஸ் குடியிருப்பிலும் வினியோகம்

ஆர்.கே.நகரில், தி.மு.க.,வினரின் தேர்தல் பிரசார பணிகளை, துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.சென்னை, ஆர்.கே.நகரில்,தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, சூரியநாராயணா சாலையில் உள்ள சத்தியா நகரில், அண்ணா நுாலகம் பகுதியில் தி.மு.க.,வினர், நேற்று பிரசாரம் செய்தனர்.

அங்கு, முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர், ஒரு காரில் காலை, 11:27 மணிக்கு வந்தனர். அவர்களை, நுாலகத்திற்கு அழைத்து சென்று, தேர்தல் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர், வேலு தெரிவித்தார். அங்கிருந்தவர்களிடம், 'உங்கள் பிரசார பணிகளை, ஸ்டாலின் பார்த்து வர சொன்னார்' என, துரைமுருகன் கூறினார்.

அப்போது, தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க.,காரங்க, அருகில் இருக்கிற காவலர்கள் குடியிருப்பில், ஓர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணப் பட்டுவாடா செய்தனர். அதை, அசிங்கமே இல்லாமல், அவர்களும் வாங்கினர்' என்று புலம்பினார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...