Thursday, January 18, 2018

தோவாளை சந்தையில் வரலாறு காணாத விலை உயர்வு: மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை

By DIN | Published on : 18th January 2018 07:41 AM |

பனிப்பொழிவால் வரத்து குறைவு காரணமாக, தோவாளை சந்தையில் புதன்கிழமை மல்லிகைப்பூ கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
தோவாளை பூச்சந்தைக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாது, வெளிமாவட்ட வியாபாரிகள், கேரள மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் வந்து போட்டி போட்டு பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது பண்டிகைக் காலம் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பனியுடன் அதிவேக காற்றால், மல்லிகைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் மல்லிகைப்பூவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு மல்லிகைப்பூ வருகை மிகவும் குறைந்து விட்டது. பொங்கல் தினத்துக்கு முந்தைய நாள் (ஜன.13) மல்லிகைப்பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக விலை குறைந்திருந்த நிலையில், புதன்கிழமை கிலோ ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.650, சம்பங்கி ரூ. 300, கோழிக்கொண்டை ரூ.50, ஓசூர் ரோஜா ரூ.200, சேலம் அரளி ரூ.220, வாடாமல்லி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.120, வெள்ளை செவ்வந்தி ரூ.160, தாமரைப்பூ ஒன்று ரூ.12 என்ற விலையில் விற்பனை ஆனது.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...