Tuesday, February 13, 2018

இ - சேவை' மையங்களில் 'பிளாஸ்டிக் ஆதார்' நிறுத்தம்

Added : பிப் 13, 2018 00:29

சென்னை: அரசு நடத்தும், 'இ - சேவை' மையங்களில், 'பிளாஸ்டிக் ஆதார்' அட்டை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் நடத்தும், இ - சேவை மையங்களில், அசல் நிரந்தர, ஆதார் அட்டைக்கு மாற்றாக, 30 ரூபாய் கட்டணத்தில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை தடை செய்துள்ளது.எனவே, அரசின் இ - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுகிறது. ஆதார் அட்டை யின் நகலை, 12 ரூபாய் கட்டணத்தில், காகித தாளில், பொதுமக்களுக்கு அச்சிட்டு வழங்கும் சேவை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024