Tuesday, June 12, 2018

மருத்துவ கல்லூரி தரம் உயர்த்தப்படும்'

Added : ஜூன் 11, 2018 23:23

சென்னை: ''அண்ணாமலை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.அமைச்சர் விஜயபாஸ்கர்: அண்ணாமலை மருத்துவ கல்லுாரி, உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, சி.டி., ஸ்கேன் வசதி செய்யப்பட உள்ளது. இந்த மருத்துவமனையை, மிகப்பெரிய மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதல்வரின் அனுமதி பெற்று, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...