Monday, October 1, 2018


தாம்பரம்-கொல்லம் ரயில் நீட்டிப்பு

Added : அக் 01, 2018 04:10

சென்னை : தாம்பரம்- கொல்லம் ரயில் சேவை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழி மறுநாள் காலை 10:00 மணிக்கு கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து செவ்வாய், வியாழன், சனி காலை 11:30 மணிக்கு புறப்பட்டு இரவு 3:30 மணிக்கு தாம்பரம் செல்லும்.நேற்று முன்தினத்துடன் முடிந்த இந்த ரயில் சேவை, மேலும் இருமாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்., 1, 3, 5, 8, 10, 15, 22, 24, 26, 29, 31, நவ., 5, 7, 9, 12, 14, 16, 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் புறப்படும். கொல்லத்தில் இருந்து அக்., 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 23, 25, 27, 30, நவ., 1, 3,10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, டிச., 1ம் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து திங்கள் அன்றும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து செவ்வாய் அன்றும் புறப்படும் சென்னை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் டிசம்பர் வரை இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...