Monday, October 1, 2018

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துங்க!
சபரிமலை கோவில் நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவு


dinamalar 01.10.2018

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை, உடனடியாக நிறைவேற்றும் படி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.




கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, 10 - 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இதையடுத்து, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தாமதம்

இல்லாமல் உடனடியாக நிறைவேற்றும்படி, அவர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, திருவாங் கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், ஏ.பத்மகுமார் கூறியதாவது: சபரி மலை கோவிலுக்குள் பெண்க ளையும் அனுமதிப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு சற்று அவகாசம் வேண்டும்.

பக்தர்களுக்கு, குறிப்பாக பெண் பக்தர்களுக்கு வசதி கள் செய்து தருவதற்காக, கூடுதலாக, 100 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். உண்மை யான பெண் பக்தர்கள் எவரும், சபரிமலைக்கு வரமாட்டார் கள் என்றே கருதுகிறோம். பெண் உரிமை ஆர்வலர் கள் மட்டுமே சபரிமலைக்கு வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பூர்வமாக சென்ற முதல் பெண் வரவேற்பு

பெண்களுக்கு தடை இருந்தபோது, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 1994ல், அப்போதைய கலெக்டராக இருந்த, கே.பி., வல்சலா குமாரி, சபரிமலைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தவழக்கில், கலெக்டராக சென்று ஆய்வு செய்ய, வல்சலா குமாரிக்கு, உயர் நீதி மன்றம் அனுமதி அளித்திருந்தது.

''அப்போது எனக்கு, 41 வயது; ஆனால், 18 படி ஏறவில்லை. 50 வயதுக்குப் பின் சபரிமலைக்கு சென்றுள்ளேன். தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்,'' என, வல்சலா குமாரி கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, பெண் பக்தர் கள் அதிக அளவில் குவிவர் என, எதிர்பார்க்கப் படும் நிலையில், சபரிமலையில், பெண்களுக் கான கழிப்பறைகள் கட்டுவதே, தற்போது உடனடி தேவையாக உள்ளது. சன்னிதானத் துக்கு செல்லும், 6.5 கி.மீ., பாதை யில், தற்போது ஆண்களுக்காக, 20 கழிப்பிடங்களும், பெண் களுக்காக, ஏழு கழிப்பறைகளும் உள்ளன. பெண்களுக்கான கழிப்பறைகளை அதிக அளவில் கட்டுவதற்கான நடவடிக்கை களில், தேவஸ்வம் போர்டு ஈடுபட்டுள்ளது.

மேலும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும். மலை ஏறுவதற்கு, பெண்களுக்கு வசதிகள் செய்யப் பட வேண்டும். அவர்களது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024