Tuesday, December 11, 2018

தாஜ் மஹாலை பார்க்க கட்டணம் அதிகரிப்பு

Added : டிச 11, 2018 01:10



ஆக்ரா, டிச. 11-

உத்தர பிரதேச மாநிலத்தில், தாஜ் மஹாலில் உள்ள கல்லறை பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக, திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், ஆக்ரா மாவட்டத்தில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, தாஜ் மஹால் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.மொகலாயர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாக உள்ள தாஜ் மஹாலை பார்வையிட, பொதுமக்களிடம், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று, தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு, கூடுதலாக, 200 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், முக்கிய பகுதியில், மக்கள் கூட்டம் சேருவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிய கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள், 250 ரூபாய்; வெளிநாட்டு பார்வையாளர்கள், 1,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 50 ரூபாய்க்கான டிக்கெட் வைத்திருப்போர், கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது.ஆனால், அவர்கள், தாஜ் மஹாலை சுற்றி வந்து, பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் காணமுடியும்.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...