Thursday, March 12, 2015

இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை ஏற்க தமிழக அரசு நிபந்தனை

சென்னை: தமிழகத்தில் உள்ள, இரண்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை, சில நிபந்தனைகளுடன், தமிழக அரசு ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்து, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இ.எஸ்.ஐ., நிறுவனம், மருத்துவக் கல்லூரியை கைவிட, முடிவு செய்துள்ளது. சென்னை, கே.கே., நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 2013 - 14ல், 100 இளநிலை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டில் இருந்து, 38 முதுகலை மாணவர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவையில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி கட்டு மானப் பணி முடிந்து, இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இக்கல்லூரிகளை, சில நிபந்தனைகளுடன் ஏற்று நடத்த, தமிழக அரசு தயாராக உள்ளது. சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, 494.62 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு உள்ளது. கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, 580.57 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. திட்ட மதிப்பீட்டு தொகை, மிகவும் அதிகம். இந்த இரு திட்டங்களும் நிறைவு பெற, 571.23 கோடி ரூபாய் தேவை. அதை, இ.எஸ்.ஐ., நிறுவனம் வழங்க வேண்டும். கல்லூரியை நடத்துவதற்கு ஏற்படும் தொடர் செலவுகளை, மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மருத்துவமனையை நடத்துவதற்கான தொடர் செலவுகளில், 87.5 சதவீதத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு, மாநில விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். கல்லூரியை, தற்போதைய விதிமுறைப்படி, மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுக்கு, 85 சதவீதம், மத்திய அரசுக்கு 15 சதவீதம் என, இடஒதுக்கீடு பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், நீங்கள் தலையிட்டு, தமிழக அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினால், மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...