Thursday, May 4, 2017

சேலம் - கரூர் பயணிகள் ரயிலை நிறுத்த முடிவு?

பதிவு செய்த நாள் 03 மே
2017
22:18

கரூர்: சேலத்தில் இருந்து, கரூர் வரை இயக்கப்படும் பயணியர் ரயிலில், பயணியரின் வருகை மிகக் குறைவாக இருப்பதால், அந்த ரயிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் - கரூர் இடையே, 2013 முதல் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு, சேலம் - கரூர் இடையே பயணியர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும், காலை, 6:00 மணி மற்றும் 11:30 மணி, மாலை, 5:30 மணி ஆகிய நேரங்களில், சேலத்தில் இருந்து புறப்பட்டு, கரூர் சென்றடையும். பயணியரிடம் வரவேற்பு இல்லாததால், இந்த ரயில் சேவையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தென்னகரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சேலம் - கரூர் பயணியர் ரயிலில், பயணியர் வருகை, 13 முதல், 21 சதவீதம் மட்டும் உள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், வரும் காலத்தில், இந்த ரயில் சேவை நிறுத்தப்படும். இருந்தும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி வரை இந்த பயணியர் ரயிலை நீட்டித்தால் மட்டுமே, தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, திருச்சியில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட்ட கிருஷ்ணராஜபுரம் ரயில், சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள், பயணியரிடையே வரவேற்பு இல்லாததால், சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...