Wednesday, May 31, 2017

Chennai Silks

தீயணைக்க ஆகும் செலவுகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தான் தரவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 12 மணி நேரமாக எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் சுற்று வட்டாரப்பகுதி புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. புகைமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து தற்போது கூறமுடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடம் உறுதி தன்மையை இழந்திருந்தால், நிச்சயம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்டடம் கட்டியதில் விதிமீறல் இருந்தால்,உரிமையாளர் மற்றும் அனுமதி வழங்கிய சிஎம்டிஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீயை அணைக்க ஆகும் செலவுகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தான் தரவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...