Wednesday, May 31, 2017

Chennai Silks

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீயை அணைக்க முடியாததற்கு இதுதான் காரணம்?

சென்னை தி.நகரில் ஏழு மாடி கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் இன்று அதிகாலை தீ பிடித்ததாக அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி இப்போதுவரை நடந்து வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்ட வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். ஸ்கை லிஃப்ட, ராட்சக கிரேன் மூலம் தீயை அணைத்தாலும், புகை மூட்டம் அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்கு உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் கட்டடத்தில் சில பகுதிகளை ஜே.சி.பி மூலம் தீயணைப்பு வீரர்கள் இடித்துத் தள்ளினர். இதன் பிறகு தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தற்போது, கிட்டத்தட்ட 125 தீயணைப்பு வீரர்கள் மூலம் தீயணைப்புப் பணி நடந்து வருகிறது. அப்படி இருந்தும், தீயணைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற இன்னும் சில மணி நேரம் ஆகும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து தீ எரிவதற்கு, கடையின் உள்ளே இருக்கும் ஜெனரேட்டர் அறையில் உள்ள டீசல் பேரல்கள் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பேரல்களில் இப்போது தீ பிடித்துள்ளதால், தீயை அணைப்பதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோடை காலம் என்பதால், கடை உரிமையாளர்கள் டீசல் பேரல்களில், டீசல் இருப்பை அதிகமாக சேமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024