Saturday, May 27, 2017

'ஜெ., படம் வைத்தால் வீரப்பன் படம் வைப்போம்'


பதிவு செய்த நாள்27மே2017 00:07




ஈரோடு : ''நீதிமன்றத்தால் குற்றவாளி என, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

அவமானம்:

ஈரோட்டில் அவர் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் வைக்கப்பட உள்ளதாகவும், அதை திறக்க பிரதமரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

ஏற்க முடியாது:

அவ்வாறு, ஜெ., படம் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம். எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, ஜெ., உடல் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் மணி மண்டபம் கட்ட உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறுகின்றனர். இது, மிகப்பெரிய தவறு. கடற்கரை, அரசு இடம். அங்கு அரசு நிதி ஒதுக்கி, மணி மண்டபம் கட்டுவது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...