Saturday, May 27, 2017

வயது சான்று ஆவணமாக ஆதார் அட்டை தரலாம்
பதிவு செய்த நாள்26மே2017 23:53

சென்னை: 'ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வயது சான்று ஆவணமாக, ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாமல், சிரமப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, ஆதார் அட்டையை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கருவூல கணக்குத்துறை கமிஷனரின் கருத்துருவை ஏற்று, இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024