Friday, May 5, 2017

மருத்துவ படிப்பு வழக்கு 3வது நீதிபதி விசாரணை

பதிவு செய்த நாள் 05 மே  2017   01:14

சென்னை: முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் நடைமுறை குறித்த வழக்கில், மூன்றாவது நீதிபதி விசாரணை, நேற்று துவங்கியது
.
இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, முதுகலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளின்படி தான், முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும் என, கோரப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம். சுப்ரமணியம் அடங்கிய, 'சிறப்பு பெஞ்ச்' விசாரித்து, நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. அதன்படி, நீதிபதி சத்தியநாராயணன், நேற்று இவ்வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், சிறப்பு பிளீடர் ராஜசேகரன்; டாக்டர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர்கள் திலகவதி, சங்கரன் வாதாடினர்.

இன்றும் வழக்கறிஞர்களின் வாதம் தொடர்கிறது.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...