Thursday, May 4, 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணிநேரம் விசாரணை நிறைவு

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் நடைபெற்ற வருமான வரித் துறையினரின் விசாரணை நிறைவடைந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து ரம்யா வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 8 மணி நேரம் அவரிடம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது. விசாரணையின் போது, வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் ,அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

8 மணி நேர விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் மேலும் உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...