Thursday, May 4, 2017

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவை: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவை என்றார் தேமுதிக மகளிர் அணிச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திலும், தற்போது அவரது கார் ஓட்டுநர் இறப்பிலும் மர்மம் உள்ளது. இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அ.தி.மு.க.வில் பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பிடிப்பதற்கான அதிகார போட்டி வலுத்துள்ளது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது; இரு அணிகளும் இணையாது; ஆட்சியும் நீடிக்காது.
அடுத்த மாதம் குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வருவது உறுதி. நீட் தேர்வு பிற மாநிலங்களில் அமலில் உள்ளது. தமிழ்நாட்டுக்கும் அந்தத் தேர்வு தேவை என்று தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...