Wednesday, July 5, 2017

மாணவர் விடுதி சமையல் பணிக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் போட்டி

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:10

மைசூரு: கர்நாடகாவில், அரசு மாணவர் விடுதிகளில், சமையல் உதவியாளர்கள் பணிகளுக்கு, இன்ஜினியர்கள், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மைசூரு மாவட்டத்தின் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதிகளில், 58 சமையல்காரர்கள், 92 உதவியாளர்கள் பணியிடங்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் விடுதிகளில், 32 உணவு தயாரிப்பவர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டிருந்தது. உணவு தயாரிப்பவர்கள், உதவியாளர்களுக்கான தேர்வில், 134 பேர் பங்கேற்றனர்; இதில், 70 பேர், பட்டதாரிகள்; 50 பேர், முதுகலை பட்டதாரிகள், நான்கு இன்ஜினியரிங் பட்ட தாரிகளும் விண்ணப்பித்து இருந்தனர். இன்ஜினியரிங் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவரும் விண்ணப்பித்து இருந்தார். சமையல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மைசூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இதில் புளியோதரை, சேமியா பாயசம், உப்புமா, கேழ்வரகு களி, சப்பாத்தி என ஏதாவது ஒன்றை, அரை மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்; சுவையானதாக இருக்க வேண்டும். பல்வேறு ஓட்டல்களிலிருந்து வந்துள்ள, சமையல் வல்லுனர்கள், சுவையாக சமைத்தவர்களை, பணிக்கு தேர்வு செய்வர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...