Monday, July 3, 2017

Court news

கர்ணன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்! உச்ச நீதிமன்றம் கறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் அல்லது பரேல் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை முழுவதுமாக அனுபவித்தே ஆக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இறுதியாக, நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்தவர், சில நாள்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றார்.

சமீபத்தில், கோவையில் கைதுசெய்யப்பட்ட கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்றுவரும் கர்ணன், தனக்களிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் உள்ளதென்றும், அவற்றை நிவர்த்திசெய்யும் வரை தனக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கொல்கத்தா ஆளுநரிடமும் நீதிமன்றத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி கர்ணனின் மனுவை நிராகரித்தது.

Dailyhunt

No comments:

Post a Comment

Passengers can’t fly Air India to Singapore from June to Aug

Passengers can’t fly Air India to Singapore from June to Aug  Venkadesan.S@timesofindia.com 14.015.2026 Chennai : Air India will suspend its...