Friday, November 24, 2017


26, 27ல் கன மழை வாய்ப்பு

Added : நவ 23, 2017 23:51

'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், நவ., 26, 27ல், பரவலாக மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம்கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவ மழை, வலு குறைந்து காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் மட்டும், கடந்த வாரம் மிதமாக மழை பெய்துள்ளது. தற்போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, தமிழகத்தின் தென்மேற்கு பகுதியை, இருநாட்களில் நெருங்கும். அதனால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் உள்ளிட்ட மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். 26ல், தெற்கு கடலோர மாவட்டங்களிலும், 27ல், மத்திய கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யலாம். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, சிவகங்கை, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறில், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...